Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

உறுதிகளை நிறைவேற்றுவாரா அநுரகுமார திஸாநாயக்க?

.

புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கொள்கைகள் மற்றும் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக ஆசிய தேர்தல்கள் கண்காணிப்பு தொடரின் தலைவர், பஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் வருடாந்த மதிப்பீட்டு செயற்பாடு ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பஃப்ரல் அமைப்பின் அதிகாரிகளை நியமித்துள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

கொள்கைகளுக்கு ஏற்ப அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது ஆராயப்படுவதுடன் , அதனை பொதுமக்கள் அறிய வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய விடயத்தை மேற்கொள்ள கூட்டு முடிவு என்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்காக நிர்வாக சேவையில் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தொழிற் குழுக்கள், தொழிற்சங்கங்கள், வணிக சமூகம், சிவில் அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி உடன்பட்டு இலங்கையில் இனங்கள் மற்றும் நாட்டை கட்டியெழுப்ப அவசியமான ஆதரவை வழங்க வேண்டும் என ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.

புதிய ஜனாதிபதி தேர்தல் சீர்திருத்தங்களை விரைவில் மேற்கொள்வார் என நம்பிக்கை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிதி சுதந்திரம், தேர்தல்களில் விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு தேவையான விடயங்களை விரிவுபடுத்துதல், தேர்தல் அட்டவணையை யதார்த்தமாக மாற்றுதல், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தல் அதனுள் முதன்மை என அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருக்கும் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.