Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பெரும்பான்மை தமிழ் மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட கட்சி எது ?

வடகிழக்கு மாகாணங்கள் சுமார் 25 லட்சம் மக்களை கொண்ட மாகாணங்களாகும். இங்கே தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றார்கள்

பெரும்பான்மை தமிழ் மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட கட்சி எது ?
எந்த ஒரு ஒரு வெகுசன ஸ்தாபனமும் தனது மக்கள் நலன் குறித்த தனது இலக்கை அடைவதற்கு அந்த மக்களிடையே இருந்து தனது அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு,   பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெறாத எந்த ஒரு ஸ்தாபனமும் ஓட்டு மொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மையை உடையவர்கள் என்று நாம்  கருத முடியாது ..
ஜனநாயக முறையில் இந்த ஸ்தாபனங்களுக்கு உள்ள அங்கீகாரத்தை அறிவதற்கு தேர்தல் வாக்களிப்பு ஒரு காரணியாக அமைகின்றது இன்று தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கட்சிகளுக்கு கடைசி பொது தேர்தலின் போது கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் பார்ப்போமானால் வடகிழக்கு மாகாணங்கள் சுமார் 25 லட்சம் மக்களை கொண்ட மாகாணங்களாகும். இங்கே தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றார்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகள் 3,27168
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள் 67,768
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்ட பாக்குகள் 67692
கீழ மக்கள் ஜனநாயக கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள் 61,464
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பெற்றுக் கொண்ட வாக்குகள் 51,301
இங்கே போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகள் சிங்கள கட்சிகளின் வாக்குகளை நாம் கணக்கில் எடுக்கவில்லை பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்ற தனி தமிழ் கட்சியில் என்றால் இங்கு எதுவுமே இல்லை .
 இந்த நிலையில் தமிழ் மக்களால் எதைத்தான் பெற்றுக் கொள்ள முடியும் மறுபக்கம் பார்த்தால் இந்த கட்சிகளை தலைமை தாங்குபவர்கள் தமிழ் மக்களின் சாபக்கேடா? எனவே கேட்க வேண்டியுள்ளது தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து யாருடன் பேசி முடிவெடுப்பது இந்த நிலையை மக்களுக்கு புரிய வேண்டியது ஊடகங்களின் கடமையாகிறது.
இதுதான் இன்றைய யதார்த்தம் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அன்றேல் அனைவருக்கும் தாழ்வு"