Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மாஸ் காட்டிய சஜித் – முதல் பிரசாரக் கூட்டத்திலேயே 50 ஆயிரம் பேர் திரண்டனர்: இன்று ஆட்டத்தை ஆரம்பிக்கும் ரணில், அனுர

.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் இலங்கைத் தீவு முழுவதும் சூடுபிடித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை குருணாகலையில் நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை அநுராதபுரம் சல்காது மைதானத்தில் நடத்த உள்ளார்.

அநுராதபுரத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதுடன், நாட்டு மக்களுக்கு தமது எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகளையும் வெளியிட உள்ளார்.

சஜித் பிரேமதாசவின் நேற்றைய பிரசாரக் கூட்டத்தில் 50ஆயிரம் பேர்வரை திரண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது. முதல் கூட்டத்தை சஜித்தைவிட பிரமாண்டமாக நடத்த வேண்டிய கட்டாயத்துக்குள் ரணில் விக்ரமசிங்கசிங்க தள்ளப்பட்டுள்ளதால் அவரது கூட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பொன்று எழுந்துள்ளது.

இதேவேளை, மற்றுமொரு பிரதான வேட்பாளராக கருதப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெற்கை மையப்படுத்தி காலி, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரக் கூட்டங்களில் இன்று கலந்துகொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்த உள்ளார்.