Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

டுபாயின் மீண்டும் கனமழை: விடுக்கப்பட்டது அவசரகால எச்சரிக்கை.

டுபாய் பிராந்தியத்தில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அந்நாடு பல்வேறு நெக்கடிகள சந்தித்துள்ளது.

டுபாயின் மீண்டும் கனமழை: விடுக்கப்பட்டது அவசரகால எச்சரிக்கை.

மத்திய கிழக்கில் செல்வச் செழிப்புடன் வாழும் முதன்மையான நாடு ஐக்கிய அரபு ராஜ்ஜியம்.

ஆனால், கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் பிராந்தியத்தில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அந்நாடு பல்வேறு நெக்கடிகள சந்தித்துள்ளது.

பாலைவன நகரமான டுபாயில் கடந்த 16ஆம் திகதி இரண்டு ஆண்டுகளில் பெய்யும் மழையின் அளவுக்கு 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய நெடுஞ்சாலைகள் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் டுபாய் பிராந்தியத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

விமான நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் ஒருவாரத்துக்கு மேல் விமான சேவைகளும் முடங்கின. ஒரு வாரத்துக்கு பின்னர் விமான நிலையம் வழமை போன்று இயங்கும் என ஐக்கிய அரபு ராஜ்ஜியம் அறிவித்தது.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை முதல் அந்நாட்டு காலநிலையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலை மேற்கொள்காட்டி கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. தொலைதூர பணிகள் தொடர்பில் பாதுகாப்பு எச்சரிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் சீரற்ற வானிலையால் விமான சேவைகள் பாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, அண்மையில் பெய்த மழையை விட இம்முறை குறைவான மழை வீழ்ச்சியே பதிவாகும் என குறிப்பிட்டுள்ளது.