Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

உள்ளூர் மருந்து உற்பத்தியை பலப்படுத்தும் முயற்சி: ஒரு வருட ஒப்பந்தத்துக்கு அரசாங்கம் தயார்!

.

உள்ளூர் மருந்துத் துறையை பலப்படுத்தும் முயற்சியில், குறிப்பிடத்தக்க 49 உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களுடன் ஒரு வருட ஒந்தப்பத்தில் ஈடுபட அரசாங்கம் தயாராகி வருகிறது.

தேசிய விநியோகத்துக்கு 454 அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் திறன்கொண்ட உள்ளூர் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு பிரதமர் ஹரினி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவை அமைச்சரவை ஏற்றுள்ளது.

ஏற்கனவே அரச மருந்துக் கூட்டுத்தாபனத்துடன் இதேபோன்று ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு இது கூடுதல் சிறப்பம்சமாகும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிப்பதற்கான அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதி இத் திட்டமாகும்.

உள்ளூர் மருந்து உற்பத்தியை ஆதரிப்பதற்கான ஒரு மூலோபாயமாக 2013 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்த முன்முயற்சி அங்கீகரிக்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஒப்பந்தங்களின் கீழ் உள்ளூர் நிறுவனங்களால் வழங்கப்படும் மருந்துகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பதற்கு சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.