Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள்

சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு; கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளதேசிய மாநாட்டின் போது கட்சியின் முன்னேற்றத்திற்கான பிரேரணைகள் பல நிறைவேற்றப்படவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மாவட்ட மட்டத்தில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கட்சியில் கடந்த காலங்களில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

கட்சியின் நிர்வாக சபை கூட்டத்தில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவும் அவர் தெரிவித்துள்ளார்.