Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்”: இலங்கை அரசாங்கத்திற்கு கனடாவில் கடும் எதிர்ப்பு

.

இலங்கை அரசாங்கத்திற்கு கனடாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கனடாவில் நிர்மானிக்கப்படும் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடர்பில் இலங்கையின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என பிரம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்திற்கு இலங்கையின் எதிர்ப்பைத் தெரிவித்து, இலங்கைத் தூதரக அதிகாரி துஷார ரொட்ரிகோ, நகர முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இலங்கையின் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், இலங்கையின் தீர்மானங்களை புறக்கணிக்க பிரம்டன் நகரசபை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக முதல்வர் பேட்ரிக் பிரவுன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில், தமிழ் சமூகம் தங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் மாவீரர்களை நினைவுகூருவதைத் தடுக்க அரசாங்கம் முயற்சி செய்யலாம். ஆனால் கனடாவில் அவர்களால் அதைச் செய்ய முடியாது.

கனடாவில் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்க முயல்வது உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் செயல்” என்று அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.