Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

வீழ்ச்சியடையும் ரணிலின் திட்டங்கள்: 30 பேரணிகள் முழுமையாக இரத்து

.

ஜனாதிபதி தேர்தலுக்காக 90 பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரப் பிரிவு திட்டமிட்டிருந்த போதிலும், அத்திட்டம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, தற்போது 30 பேரணிகள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் அவர் நடத்திய பேரணிகளின் எண்ணிக்கையும், மீதமுள்ள இலக்குகளை அடுத்த 10 நாட்களில் நிறைவு செய்ய முடியாத நிலையும் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் குறைந்தது ஆறு தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார அலுவலகத்தில் பாரியளவில் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அலுவலகத்தின் தலைவர்கள், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது சார்பாக பயன்படுத்துவதற்காக ஏற்கனவே பெருந்தொகையான பணத்தை சேகரித்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.