Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் பொது வேட்பாளர் வியாபாரத்துடன் கார் வாங்கிய சிவில் சமூக உறுப்பினர்!

சிவில் சமூக பிரதிநிதியொருவர் சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் வியாபாரத்துடன் கார் வாங்கிய சிவில் சமூக உறுப்பினர்!

அண்மையில் பேசுபொருளாகிய தமிழ் பொதுவேட்பாளர் கோசத்தை முன்னெடுக்கும் சிவில் சமூக பிரதிநிதியொருவர் சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

குறிப்பிடத்தக்க வேலையும் இல்லாத இந்த நபரின் வங்கிக் கணக்கில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததையடுத்து, பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சந்தேகமடைந்து, வங்கிக் கணக்கை முடக்கி, அவரை கொழும்புக்கு அழைத்து விசாரணை செய்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

தமிழ் பொதுவேட்பாளர் கோசத்தை கட்டுரைகளாகவும், மேடைகளிலும் தீவிரமாக முன்னெடுக்கும்- தன்னை சிவில் சமூக பிரதிநிதியாக அடையாளப்படுத்தும் நபர் ஒருவர்- அண்மையில் சுமார் 70 இலட்சம் ரூபா செலவில் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண வர்த்தகர் ஒருவரின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்த சிவில் சமூக பிரதிநிதி, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் அண்மையில் நபர் ஒருவரை சந்தித்த பின்னர், அவசரஅவசரமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் கார் வாங்கிய போது, அவருக்கு கார் ஓட்ட தெரியாது. சாரதி அனுமதிப்பத்திரமும் கிடையாது.

பிறிதொருவரின் உதவியுடன் காரை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அவரது வங்கிக்கணக்கில் திடீரென அதிக பணப்புழக்கம் நிலவியதால், அண்மையில் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி நிதியளிப்பு மூலங்களை வெளிப்படுத்திய பின்னர், வங்கிக்கணக்கு விடுவிக்கப்பட்டு, அவர் மீதான விசாரணைகள் முடிவுக்கு வந்ததை நம்பகரமாக அறிந்தது.