Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ரணில்,சஜித்துடன் முஸ்லிம் கட்சிகள் அநுரகுமாரவுடன் முஸ்லிம் மக்கள்

.

முஸ்லிம் கட்சிகள் சஜித்திற்கும் ரணிலுக்கும் பிரிந்துநின்று ஆதரவளிக்க முன்வந்துள்ளபோதிலும் முஸ்லிம் மக்கள் புதிய யுகம் ஒன்றை நோக்கி புதிய ஆரம்பம் ஒன்றை ஏற்படுத்தவதற்காக அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் அணிதிரண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி எம்.பி.யான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சஜித் அணியிலும் ரணில் தரப்பிலும் இலஞ்சம் வாதிகள் இணைந்துள்ளதனால் முஸ்லிம் மக்கள் நேர்மையாகச் சிந்தித்து சரியான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாடுகளுக்கென முதலாவது அலுவகம் திறக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட செயற்பாட்டாளர் எஸ்எச். அபுஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இங்கு மேலும் பேசுகையில் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சஜித்துக்கு அதரவளிப்பதாக அறிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் அறிவிப்பை பின்தள்ளிப்போட்டுள்ளார். இந்நிலையில் தலைவர்கள் என்ன முடிவெடுத்தாலும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளனர்.

இதேபோன்றுதான் மொட்டு கட்சி ஆதரவாளர்களின் நிலையும் உள்ளது. மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சஜித்துக்கும் ரணிலுக்கும் ஆதரவளிப்பதற்காக பிரிந்துநின்றாலும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் வந்துவிட்டனர். இதனால் எமது வெற்றி உறுதியாகிவிட்டது என்றார்.