Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிராமிய விளையாட்டு விழா – 2024

.

 

அஸ்பெக் மற்றும் விண்வெளி கலைமன்றம் என்பன கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவுடன் உகாஷா மொபைலின் ஆதரவுடன் இணைந்து நடாத்திய பாரம்பரிய விளையாட்டு விழா – 2024 போட்டி நிகழ்ச்சிகள் அஸ்பெக் அகடமி வளாகத்தில் 26.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இவ்விழாவில் சங்கீதக் கதிரை, குளம் கரை, பேணியும் பந்தும், சாக்கோட்டம்,பனிஸ் சாப்பிடுதல், தேசிக்கரண்டி சமநிலை ஓட்டம், முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், செங்காவடி, பலூன் உடைத்தல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் எச்.எம்.எம்.நியாஸ், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.திலீபா சிவரூபன், கவிஞர் சமூன் அன்சார், இஸ்மாயில் ஆகியோர் கலந்து சிறப்பித்து வெற்றியாளர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி வைத்தனர்.