Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இந்திய – இலங்கை கப்பல் சேவை: வாரத்தில் 03 நாட்கள் மாத்திரமே இயங்கும்

.

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்ககேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 03 நாட்கள் மாத்திரமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23 ஆம் திகதி இந்த சேவை இடை நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் சிவகங்கை கப்பலை இயக்க தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 16 திகதி பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமான நிலையில் வாரத்தில் 07 நாட்களும் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

போதிய பயணிகள் இன்மையால் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை, வாரத்திற்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 03 நாட்கள் மாத்திரம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 08 மணிக்கு நாகை துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைமைக்கும் நண்பகல் 12 மணிக்கும் வந்தடையும்.

பின்னர் பிற்பகல் 02 மணிக்கு காங்கேசன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு மாலை 06 மணிக்கு நாகை துறைமுகத்தை கப்பல் சென்றடையும்.