தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் முன்னாள் அரசியல்வாதி
தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.
யாழ்ப்பாணம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 47வது நினைவு தினமும் நினைவுப் பேருரையும் இன்று (26) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழில் உள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் “இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.