Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியேற்றம்.

குடியேறியுள்ளவர்களை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் .

இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளவர்களை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பினை செயற்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

முந்தெணியாற்று கருத்திட்டம் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை நிறைவுப்படுத்தப்படவில்லை. வெளிநாட்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் கைவிட்டு போகுமா என்ற சந்தேகம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட விவசாயிகளின் மத்தியில் காணப்படுகிறது.

உறுகாமம் - கித்துள் ஆகிய பகுதிகளை இணைத்து முந்தெணியாற்று திட்டத்தை அமுல்படுத்துவதால் 12 சிறுகுளங்களுக்கும், 25 ஆயிரம் ஹெக்டயார் விவசாய நிலங்களுக்கும் நீரை விநியோகிக்க முடியும். அதேபோல் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அத்துடன் கரடியனாறு விதை உற்பத்தி மையத்துக்கும் நீரை விநியோகிக்க முடியும்.

இதுவரை காலமும் வலதுசாரி கொள்கை உடையவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். தற்போது இடதுசாரி கொள்கையுடையவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் ஆகவே சமத்துவ அடிப்படையில் அபிவிருத்திகள் பகிரப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் எமது மக்கள் பல தசாப்தகாலமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்மைகாலமாக அந்த பகுதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டார்கள்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டவர்களை உடனடியாக வெளியேற்றுமாறும், இந்த சட்டவிரோத செயற்பாடுகள் இன நல்லினக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பு செயற்படுத்தப்படவில்லை.

இன நல்லினக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளவர்களை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பினை செயற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.