Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

“தை பிறந்தால் வழி பிறக்கும்ˮ என்பது முன்னோர் வாக்காகும். ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழ்த் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

.

“தை பிறந்தால் வழி பிறக்கும்ˮ என்பது முன்னோர் வாக்காகும். இதற்கு ஏற்ப ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழ் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

பழமைகளைப் பக்குவமாய் வழியனுப்பி புது வரவுகளுக்கு வரவேற்பு அளித்திடும் வண்ணத் திருநாள் தான் தமிழர் திருநாள் ஆகும்.

தமிழர்களின் முக்கியமான பண்டிகையான பொங்கல் திருநாள் இன்று (14) கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

சூரியதேவன் தனுராசியில் இருந்து மகரராசிக்கு நுழையும் தை முதலாம் திகதியில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனால் இது ‘மகரசங்கராந்தி’ எனவும் அழைக்கப்படுகின்றது.

வேளாண்மையை அடிப்படையாக கொண்ட தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி சொல்ல நடாத்தப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளில் சூரியனை வணங்கி புதிய பானையில் பொங்கல் செய்து⸴ சூரியனுக்குப் படையல் இடப்படுகின்றது.

உழவர் திருநாளான பொங்கலன்று, நாம் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கு உதவும் இயற்கை, கால்நடைகள் என அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் பொங்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

தை பொங்கல் விழாவானது தமிழர் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.