வித்தியா கொலை வழக்கு: குற்றவாளியான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவியவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை.
.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...
குற்றவாளியான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் வட மாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையாகவ வுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச் சாட்டில் வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் 4 வருட சிறைத்தண்டை வழங்கி தீர்ப்பளித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய வழக்கு இன்று (20.01) வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது சுவிஸ்குமாரை பணம் பெற்றுக்கொண்டு தப்பிக்க உதவிய குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட நிலையில் அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 50 ஆயிரம் ரூபாய் குற்றப்பணமும் அறவிடப்பட்டது.
மற்றைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறிகஜனுக்கும் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன்இ குறித்த நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதால் அவருக்கு திறந்த பிடியாணையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அரச சட்டத்தரணி நிசாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.