Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மக்கள் வீதியில் செல்வதற்கு அச்சப்படும் நிலை ;உண்மைகளை வெளியிடுங்கள்- அரசாங்கத்திடம் சஜித் தரப்பு கோரிக்கை..!

நாட்டு பிரஜைகளின் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும்.

நாட்டின் பாதுகாப்பு படைகளின் ஊடாக மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்றையதினம்(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இனந்தெரியாத சந்தேக நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. 

அந்த வகையில் தற்போது அரசியல் செயற்பாட்டாளரான டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

ஒவ்வொரு நபர்கள் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடுகளுடன் ஏனையோர் இணங்குவதில்லை. 

அந்த வகையில் டான் பிரயசாத்தின் அரசியல் நிலைப்பாட்டுடன் எமக்கு உடன்பாடு இல்லை.

எவ்வாறிருப்பினும் நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜையும் எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் அவருக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. 

நாட்டு பிரஜைகளின் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும். 

தம்மை தெரிவு செய்த குழுக்களை மாத்திரமே நாம் பாதுகாப்போம் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்குமாயின் அது தவறாகும்.

ஆயுத பலம் நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பாதுகாப்பு படைகளின் ஊடாக மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும். 

அதனை விடுத்து மக்கள் வீதியில் செல்வதற்கு கூட அச்சப்படும் சூழல் உருவாகுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. எமது நாடு இதற்கு முன்னர் இவ்வாறான பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறது.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தால் இந்த பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. 

எனவே நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பரந்தளவில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.