Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஆளுநர்,சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மருத்துவமனை அத்தியட்சகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்!

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகிகளுக்கான வெளிநாட்டுப் பயண விடுமுறைக்கான அனுமதி!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மருத்துவமனை அத்தியட்சகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்றது. 

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், ஊழல் இடம்பெறக் கூடாது என்பதற்காகத்தான் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன.
அவ்வாறான இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டால் அதைப் பின்பற்ற வேண்டும். 

குறிப்பாக சுகாதாரத் திணைக்களத்தின் கீழான சாரதிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்காமை தொடர்பில் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தை வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனும் ஆதரித்து கருத்துத் தெரிவித்தார்.வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டினார். 
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகிகளுக்கான வெளிநாட்டுப் பயண விடுமுறைக்கான அனுமதி ஒழுங்குபடுத்துதல், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை விடுதிக்கான கட்டடத்தின் தேவைப்பாடு, வடக்கு மாகாண மருத்துவத்துறையிலுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் ஆளணி மறுசீரமைப்பு, மருத்துவமனை பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு அதற்குரிய தீர்வுகளும் இதன்போது கண்டறியப்பட்டன. 

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட மருத்துவமனைகளின் பணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.