Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நியூயார்க்கில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்ததில், சீமென்ஸ் CEO மற்றும் குடும்பத்தினர் பலி!

அவசரகால மற்றும் போலீஸ் படகுகள் ஆகியவை ஆற்றில் மீட்பு பணியில்

வியாழக்கிழமை நியூயார்க் நகரின் ஹட்சன் ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில், மூன்று குழந்தைகள் உட்பட அதில் பயணம் செய்த ஆறு பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.   இறந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பமும், விமானியும் டங்குவதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார்.  விபத்தில் கொல்லப்பட்டவர்களை அதிகாரிகள் இன்னும் பகிரங்கமாக அடையாளம் காணவில்லை என்றாலும், ஸ்பெயினில் உள்ள சீமென்ஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் ஆகியோர் விமானத்தில் இருந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

விபத்து குறித்து காவல்துறை அறிக்கை! 

நியூயார்க் காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் கூறுகையில், நியூயார்க் ஹெலிகாப்டர் டூர்ஸால் இயக்கப்படும் பெல் 206 ஹெலிகாப்டர், பிற்பகல் 3 மணியளவில் நகர மைய ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து புறப்பட்டு, ஹட்சன் மீது வடக்கு நோக்கி பறந்தது. அது ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை அடைந்தபோது தெற்கு நோக்கித் திரும்பி, சில நிமிடங்களுக்குப் பிறகு விபத்திற்கு உள்ளானது.   பிற்பகல் 3:15 மணியளவில் லோயர் மன்ஹாட்டன் அருகே தலைகீழாக தண்ணீரில் மோதி நீரில் மூழ்கியது என்று டிஷ் மேலும் கூறினார்.  சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விபத்தின் காணொளிகளில், ஒரு பெரிய பொருள் ஆற்றில் விழுவது போல் தோன்றியது.  அவசரகால மற்றும் போலீஸ் படகுகள் ஆகியவை ஆற்றில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.