Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

12500 ஆண்டுகளுக்கு முன் அழிவடைந்த ஓநாய் இனத்திற்கு புத்துயிர் அளித்த விஞ்ஞானம்

,

சுமார் 12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த Dire Wolf இன ஓநாய்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்ட வரலாற்று சாதனை அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

Colossal Biosciences என்பது அமெரிக்காவில் இயங்கும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனமாகும். இதன் தேர்ச்சி பெற்ற விஞ்ஞானிகளால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

13000 ஆண்டுகள் பழைமையான Dire Wolf இன ஓநாய்களின் பற்கள் மற்றும் 72,000 ஆண்டுகள் பழைமையான அவற்றின் மண்டையோடுகளின் மரபணுக்களை பெற்று DNA மற்றும் குளோனிங் முறைமைகளின் ஊடாக Dire Wolf இன 3 ஓநாய் குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுவொரு மைல்கல் சாதனை என Colossal Biosciences நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Ben Lamm தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 2 குட்டிகளும் இந்த வருடம் ஒரு குட்டியும் இவ்வாறு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புத்துயிர் பெற்ற 3 ஓநாய் குட்டிகளுக்கும் Romulus, Remus மற்றும் Khaleesi என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதவிர அழிவடைந்துபோன Dodo இன பறவைக்கும் டாஸ்மேனிய புலிக்கும் புத்துயிர் அளிக்க தயாராகிவருவதாக Colossal Biosciences நிறுவனம் அறிவித்துள்ளது.

அழிவடைந்த உயிரினமொன்று புத்துயிர் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.