Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா; வடக்கு மீனவர்களின் துர்பாக்கியம்! ரஜீவன் எம்.பி. கவலை

.

கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி இழுவைப் படகுகளால் சூறையாடப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.

பல மணி நேரம் தொடர்ச்சியாக இழுவை படகுகள் இயங்குவதன் மூலம் சூழல் மாசடைகிறது, எமது வடபகுதி மீனவர்கள் நவீன தொழில்நுட்ப முறைகள் அற்ற இயற்கை உடன் கூடிய மரபு ரீதியான முறைகளைப்  பயன்படுத்தியே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் இந்த முறையானது மீன்வளத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. 

கடற்றொழில்  அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி இழுவைப் படகுகளால் சூறையாடப்படுகின்றது. 

ஆனால் எமது மீனவர்கள் எந்த வித போதிய வருமானமும் இன்றி வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் மக்களாகக்  காணப்படுகிறார்கள் என தெரிவித்தார்.