Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடைபயணத்திற்கு அனுமதி கோரிய வழக்கு! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பொத்தூர் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க உத்தரவிட வண்டும்,

ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடைபயணத்திற்கு அனுமதி கோரிய வழக்கு! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! 

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனு மீது 4 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவடி காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சமுகத்தில் நிலவும் ஏற்றதாழ்வை களைவதற்காகவும், சமுகத்தில் பின் தங்கிய பிரிவினரின் முன்னேற்றம், பின்தங்கியோரின் கல்விக்காக சேவையாற்றியவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தபோது அதன் மீது காவல்துறை எந்த முடிவும் எடுக்கவில்லை. 

மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் அமைந்துள்ள பொத்தூர் வரை வழக்கறிஞர்கள் வரும் மார்ச் 30ஆம் தேதி அல்லது அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி என ஏதேனும் ஒரு தேதியில் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்,"எனக் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஆம்ஸ்ட்ராங்கினால் பயனடைந்த வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு மரியாதை செய்ய விரும்புகின்றனர். எனவே, ஆம்ஸ்ட்ராங் உருவப்படம் மற்றும் பேனாவை ஏந்தி சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து அவரது நினைவிடம் அமைந்துள்ள பொத்தூர் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க உத்தரவிட வண்டும்,"எனக் கேட்டுக் கொண்டார். 

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபிநாத், "மனுதாரர் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கேட்ட மனுவில், ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்த நாளை முன்னிட்டோ அல்லது அவரது நினைவு நாளை முன்னிட்டோ நடைபயணம் மேற்கொள்வதாக எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. நடைபயணம் மேற்கொள்வதற்கான எந்த ஒரு அவசியமும், காரணமும் இல்லாத நிலையில் நடைபயணத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் 4 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து அனுமதி அளிப்பதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை," என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், "மனுதாரர் அளித்த 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்," என ஆவடி காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.