Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா: இயல்புநிலைக்கு திரும்பியது சாவகச்சேரி வைத்தியசாலை

.

சாவகச்சேரி வைத்தியசாலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ராஜீவ் தொடர்ந்தும் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருடன் இடம்பெற்ற நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் வைத்தியர் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்த வைத்தியர் அர்ச்சுனா

சாவகச்சேரி வைத்தியசாலையில் அத்தியட்சகர் யார்? என்பது தொடர்பில் நீண்ட விவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் அத்தியட்சகர் கடந்த மாதம் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டிருந்தார்.

தான் பதவியேற்றப் பின்னர் வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் அவ் வைத்தியசாலையில் பணியாற்றிய ஏனைய வைத்தியர்கள் அவருக்கு எதிராக திரும்பியதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

07ஆம் திகதி இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் மறுநாள் 08ஆம் திகதி அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் நீடித்திருந்தது.

நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறையில் தான் செல்வதாகவும் மீண்டும் வருவேன் எனவும் கூறிச் சென்றார்.

இதனையடுத்து கடந்த ஒன்பதாம் திகதி வடமாகாண சுகாதார திணைக்களத்தால், வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளார். பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால், பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பதில் அத்தியட்சகராக அமைச்சு அனுமதியுடன் வடக்கு திணைக்களம் நியமித்திருக்கிற போதிலும் வைத்தியர் அர்ச்சனாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட எந்த ஒரு கடிதமும் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனாவும் அவ்வாறுதான் கூறுகிறார்.

இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் அத்துமீறி காணொளி எடுக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது