Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ராஜபக்ச தரப்புடன் இணையும் சனத் நிஷாந்தவின் மனைவி?; உருவாகும் மற்றுமொரு பெண் அரசியல்வாதி

.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் கோகிலா குணவர்தன தற்போது முழுவதுமாக ரணில் பக்கம் இணைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியை ராஜபக்ச தரப்புடன் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி நாமல் ராஜபக்ச தலைமையில் திவுலப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சட்டத்தரணி சமரி பிரியங்கா பகிரங்கமாக ராஜபக்ச அணியிலிருந்து அரசியலுக்கு பிரவேசித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்திற்கு கம்பஹா மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் கோகிலா குணவர்தன பங்குபற்றாமை அவதானிக்கப்பட்டது.

சனத் நிஷாந்த திடீர் விபத்தால் உயிரிழந்ததையடுத்து அது சந்தேகத்திற்குரியது என அவரது மனைவி சமரி பிரியங்கா குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதேவேளை, சனத் நிஷாந்தவின் வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு பிரவேசிக்குமாறு அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்திய சனத் நிஷாந்தவின் மனைவி கம்பஹாவிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிப்பதன் மூலம் கோகிலா குணவர்தனவுக்கு எதிராக அவரை முன்னிலைப்படுத்துவது தெளிவாகிறது.