Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதிக்கு ஐந்து அம்ச கோரிக்கை!

தேர்தல் பிரச்சாரங்கள்.

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பருத்தித்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக, பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் கொட்டடி கடற்கரையில நேற்று (03) வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில், எல்லைதாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை தடுத்து நிறுத்த வேண்டும், சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட தொழில்களை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும், போதைப்பொருள் ஒழிப்பு, 16 வயது வரை கட்டாய கல்வி உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுர குமார திசாநாயக்கவுக்கு வடமாகாண மீனவர்கள் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரத்திடம் வழங்கிவைக்கப்பட்டது.

இப்பொதுக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரம், சர்வமதத் தலைவர்கள், வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.