Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பிறிக்ஸ் மாநாடு “வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்தால் அனுர, விஜித பங்கேற்கவில்லை”

.

சீனா, ரசியா, இந்தியா ஆகிய நாடுகளை மையப்படுத்திய பிறிக்ஸ் (BRICS) பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்காமல் இருப்பதற்கு வெளிநாட்டு சக்தியின் அழுத்தம் ஏதேனும் காரணமா என என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

“பிறிக்ஸ் உறுப்புரிமைக்கு இலங்கை விண்ணப்பித்திருப்பதைக் குறித்து மகிச்சியடைவதாக கூறிய அவர் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகிய இருவரும் மாநாட்டில் பங்கேற்காமலிருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவர்கள் முக்கியமான மாநாடுகளில் பங்கேற்பது அவசியம் என்றும் அணிசேரா வெளிவிவகாரக் கொள்கை இலங்கைக்கு இன்றியமையாதது என்றும் அவர் மேலும் கூறினார்.

ரஷ்யா, சீனா, இந்தியா, ஈரான், தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இந்த கண்டங்களுக்கு இடையேயான ஓஐசியில் உறுப்பினர்களாக உள்ளதோடு, அதன் 16 ஆவது அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி ரஷ்யாவின் கசான் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பிறிக்ஸ் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதி மட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

பிறிக்ஸ் உறுப்புரிமையைப் பெறுவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் கடந்த முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது இலங்கை அரசாங்கம் அவரிடம் கோரியதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இந்தியா உட்பட ஏனைய உறுப்பு நாடுகளிடமும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்த மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தேர்தல் காலம் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக அவர் இந்த வருட மாநாட்டில் பங்கேற்கமாட்டார் எனவும் அமைச்சர் கூறியிருந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டுமென அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பிறிக்ஸில் இணைய வேண்டும் என்று இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.