Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பொது வேட்பாளரின் தாக்கம் நாடெங்குமே உணரப்படுகிறது

.

சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக பன்சாலைகள் உருவாகும், அனுரகுமார திசாநாயக்கா இணைந்த வடக்கு கிழக்கை துண்டாடியவர் ரணில் எம்மை எப்போதுமே ஏமாற்றுபவர் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்

தமிழர்கள் எல்லாரும் ஒன்று பட வேண்டிய தருணம் இது இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் வந்த பிறகு ஜனாதிபதி தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் அவர்களது இடங்களில் பிரசாரம் செய்யாமல் வடக்கு கிழக்கில் தற்போது நிலை கொண்டுள்ளனர். தற்போது பொது வேட்பாளரின் தாக்கம் நாடெங்கும் உணரப்பட்டு வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் அவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை கூறவும் கடந்த கால ஜனாதிபதிகள் எமக்குச் செய்த துரோகத்திற்கு பரிசாகவே நாம் இந்த முறை சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கின்றோம் என்ற செய்தியை கொடுக்க வேண்டி இருக்கின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் நல்லாட்சி காலத்தில் அதிக பன் சாலைகளை நிறுவியவர். சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக பன் சாலைகள் உருவாகும்.

அனுரகுமார திசாநாயக்கா இணைந்த வடக்கு கிழக்கை துண்டாடி அதனைப் பிரிக்க காரணமாக இருந்தவர் அனுரகுமார. ரணில் எம்மை எப்போதுமே ஏமாற்றுபவர் என்பதை இந்த அரசியல்வாதிகளின் நோக்கங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.