Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மகளின் மீது மோதிய லொறி – துரத்திச் சென்ற தந்தை: இறுதியில் கொலையாக மாறிய அசம்பாவிதம்

.

விபத்தை ஏற்படுத்திய லொறியை பின்னால் துரத்திச்சென்ற நபரொருவர் எதிர்பாராவிதமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இரத்தினபுரி பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

பலாங்கொடை – அம்பெவில பகுதியை சேர்ந்த யூ,எ.திலின ரங்க லால் எனப்படும் 32 வயதுடைய நபர் நேற்று பிற்பகல் தனது மனைவியையும் மகளையும் அழைத்து கொண்டு தனது மகளுக்கு தடுப்பூசி ஒன்று போடுவதற்காக பலாங்கொடை வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

மகளுக்கு தடுப்பூசி போட்டு கொண்டு வீடு திரும்பும் வழியில் பலாங்கொடை பேருந்து தரிப்பிடம் அருகில் வியாபார நிலையம் ஒன்றிற்கு செல்வதற்காக நின்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிருத்தி விட்டு மகளையும் அவ்விடத்தில் இருக்குமாறு கூறிவிட்டு வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

எதிர்ப்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்த லோறி ஒன்று நிருத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் மகளையும் இடித்து சென்றுள்ளது. இதனை அவதானித்த திலின ரங்க லால் கோசமிட்டு லோறியினை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

எவ்வாறாயினும் மோட்டார் சைக்கிளையும் அவரது மகளையும் மோதிய லோறி சாரதி லொறியை நிறுத்தாமல் அங்கிருந்து மிக வேகமாக தப்பி சென்றுள்ளார்.

விபத்துக்குள்ளான மகளை அவ்விடத்தில் இருத்தி விட்டு மோட்டார் சைக்கிளை எடுததுக்கொண்டு திலின லோறியினை துரத்தி சென்றுள்ளார்.

லோறி சாரதி பலாங்கொடை – கல்தொட்ட பிரதான வீதியில் அதிக வேகத்தில் செல்வதை கண்ட திலின அதனை துரத்தி சென்று லோறியை மடக்கி பிடித்து அதில் ஏறுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

லொறியில் இருந்து தள்ளிவிடப்பட்ட திலின

அப்போது குறித்த லோறி சாரதி, அவரை இறக்கிவிட முயற்சி செய்யும் நோக்கத்தில் அதிக வேகத்தில் சென்று மின் கம்பத்தில் மோதியதால் திலின கொல்லப்பட்டார்.

லொறியை துரத்தி சென்ற குறித்த திலின சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை நீதிமன்ற நீதிவான் பாக்யா விக்ரமசிங்க சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் மூலம் பிரதே பரிசோதனையை மேற்கொண்டு நிதிமன்றத்தில் சம்பவம் தொடர்பிலான ஆதாரங்களை முன்வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏழு வயதுடைய மாணவி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை தேடும் பனியில் பலாங்கொடை பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.