Breaking News
ஓடுதளத்தில் தீப்பற்றி எரிந்த தென்கொரிய விமானம்.. பயணிகள் பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!
.
48.jpeg)
தென்கொரியாவில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றிய கோர விபத்தில் பலியான பயணிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.தென்கொரியாவில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றிய கோர விபத்தில் பயணிகள் 62 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் என மொத்த 181 பேருடன், தென்கொரியாவின் ஜிஜு நிறுவன பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை தென்கொரியா நோக்கி வந்து கொண்டிருந்தது.தலைநகர் சியோலில் இருந்து 288 கிலோமீட்டர் தொலைவில், தென்மேற்கு திசையில் அமைந்துள்ள முசான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று பக்கவாட்டு தடுப்பில் வேகமாக மோதியதில் விமானம் தீப்பற்றி எரிந்தது.
தென்கொரிய நேரப்படி இன்று காலை 9:07 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை85 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல பயணிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.