Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்

.

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய செய்தித்தாளில் வெளியான செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற ஊடகச் செய்திகள் நகைப்புக்குரியவை என்று கூறியுள்ளது."நாங்கள் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும், கனேடிய அரசாங்க ஆதாரம் ஒன்று செய்தித்தாளில் கூறப்படும் இத்தகைய அபத்தமான அறிக்கைகளை அவர்கள் தகுதியான அவமதிப்புடன் நிராகரிக்க வேண்டும்" என்று MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்."இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்கள் ஏற்கனவே சிதைந்துவிட்ட எங்கள் உறவுகளை மேலும் சேதப்படுத்துகின்றன" என்று அவர் மேலும் கூறினார்.

அமித் ஷா திட்டம் தீட்டி, பிரதமர் மோடிக்கு தெரிவித்ததாக அந்த செய்தி கூறியது

பெயரிடப்படாத கனேடிய தேசிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி, நிஜ்ஜார் படுகொலை சதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் திட்டமிடப்பட்டது என்றும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது எனவும் கூறியது.எவ்வாறாயினும், பிரதமர் மோடிக்கு எதிரான இந்தக் கூற்றை ஆதரிக்கும் எந்த ஆதாரமும் கனடாவிடம் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது."மோடிக்குத் தெரியும் என்பதற்கான நேரடி ஆதாரம் கனடாவிடம் இல்லை என்றாலும், இந்தியாவில் உள்ள மூன்று மூத்த அரசியல் பிரமுகர்கள், குறிவைக்கப்பட்ட கொலைகளைப் பற்றித் தொடர்வதற்கு முன் மோடியுடன் விவாதித்திருக்க மாட்டார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது" என்று அந்த அதிகாரி கூறியதாக செய்தி அறிக்கை கூறியது.

தொடர்ந்து இந்திய மீது கனடா வைக்கும் குற்றச்சாட்டால் இரு நாட்டு உறவில் சிக்கல் அதிகரிக்கிறது

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, எஸ் ஜெய்சங்கர் மற்றும் தோவல் மீது நேரடியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.இது கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முந்தைய குற்றச்சாட்டுகளால் எழுந்த சர்ச்சைகளை மேலும் தூண்டியுள்ளது.கடந்த ஆண்டு, இந்திய-கனடா இராஜதந்திர உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. ஜஸ்டின் ட்ரூடோ, நம்பத்தகுந்த உளவுத்துறை கூறியதை அடுத்து இந்திய அரசாங்க முகவர்களை நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புபடுத்தியதில் இருந்து இரு நாட்டு உறவும் விரிச்சலடையத்தொடங்கியது.இந்த விவகாரத்தில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று இந்தியா கடுமையாக மறுத்து, இந்த கூற்றுக்கள் அடிப்படையற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் தொடர்ந்து நிராகரித்தது வருகிறது.