Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சீர்திருத்தங்கள் கடினமானது, ஆனால் இலங்கை சரியான பாதையில் செல்கிறது

.

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானது இருந்தாலும் இலங்கை சரியான பாதையில் செல்கிறது என இலங்கைக்கான கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் பொருளாதார மற்றும் அரசாங்க சீர்திருத்தங்களின் முக்கிய தேவைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள் சவால் நிறைந்ததாக இருந்தாலும் இலங்கை சரியான பாதையில் செல்கிறது என வலியுறுத்தினார்.

இந்த சீர்திருத்த செயல்முறைகள் முன்னேறும்போது, இலங்கை மக்கள் அவர்களது தலைவர்களிடமிருந்து வெளிப்படைதன்மை, பொறுப்புக் கூறல் போன்றவற்றுக்கு தகுதியானவர்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் மாற்றத்துக்கான அழைப்பை பிரதிபலிக்கிறது.

இவற்றை உணர வேண்டிய பொறுப்பில் அரசாங்கம், வணிகத் துறை, கல்வித்துறை, பத்திரிகை, சிவில் சமூகம் உட்பட நாட்டின் தலைவர்களிடம் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

புதிய அரசாங்கம் உருவாகும் நிலையில், வணிகத் தலைவர்களை முக்கிய பங்கை வகிக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.

வணிகத் தலைவர்கள் வெறுமனே பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள் மட்டுமல்ல. அவர்கள் சமூக சிந்தனையாளர்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

வணிகத் தலைவர்களின் செயலூக்கமான ஈடுபாடு, வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிறந்த நிர்வாக நடைமுறைகளை முன்னெடுக்க உதவும் எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்க வர்த்தகங்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த உறவு மேலும் விருத்தியடைய இலங்கை அரசாங்கம் நிலையான ஆட்சி முறையை அமைப்பது இன்றியமையாததாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களின் அடிப்படையில் அமெரிக்க – இலங்கை வர்த்தக உறவின் எதிர்காலம் குறித்து சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதுடன் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் யூகிக்கக்கூடிய நிர்வாக அமைப்பை உருவாக்குவதன் மூலம் பொருளாதார கூட்டுறவின் முழு ஆற்றலும் திறக்கப்படும்.

இரு நாடுகளுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க அமெரிக்க இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளது எனவும் சங் தெரிவித்துள்ளார்.