Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அனுரவின் அரசாங்கத்தில் எத்தனை அமைச்சர்கள்?

.

 

ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறுவார் என சில கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தாம் ஜனாதிபதியாக தெரிவான அன்று இரவே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

எதிர்வரும் ஜுலை முதல்வாரத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கைகள் மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த தகவல்களை அனுரகுமார வெளியிட உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.

 

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் 25 அமைச்சர்களே நியமிக்கப்படுவர் என அக்கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

25 அமைச்சர்களை நியமிப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவை விஞ்ஞானப்பூர்வமாக உருவாக்கப்படும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு இடையில் உரிய உறவுகளை பேணுவம் வகையில் அமைச்சுகள் வகுக்கப்பட்டுள்ளன.

அனைத்து மக்களும் தங்கள் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக்கொள்ளும் வகையில் அமைச்சுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.