Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொழும்பில் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்ட அம்பியூலன்ஸ்: போக்குவரத்து பொலிஸாரின் அலட்சியமா? அசமந்தமா?

.

உலகின் மிகவும் பரபரப்பான நகரங்களில் இலங்கையின் தலைநகர் கொழும்பும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

இங்கு காலை முதல் இரவு வரையில் கடும் வாகன நெரில் காணப்படும். இதனால் பலரும் பலவகையான நெருக்கடிகளை எதிர்கொள்வதுடண்டு.

ஒரு சில நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் வீதியை கடப்பதற்கு கூட 10-15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் எரிச்சலடையும் பாதசாரிகள் போக்குவரத்து பொலிஸாருடன் முரண்படுவதும் உண்டு.

இவ்வாறான மிகவும் பரபரப்பான காலைப்பொழுதில் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் கடும் வாகன நெரிசலுக்கு மத்தியில் அம்புலன்ஸ் ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் இன்று காலை பதிவாகியிருந்தது.

அம்புலன்ஸ் வண்டி தனது பிரத்தியேகமான ஒலியை எழுப்பிய போதிலும், அதற்கு வழிவிடுவதற்கு யாரும் முன்வரவில்லை.

மிகவும் அவசரமாகச் சென்ற அந்த வண்டி சுமார் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டது.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் அம்பியூலன்ஸ் வண்டிக்கு வழிவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.

போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட வாகன சாரதிகள் அனைவரும் இன்றைய இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயற்பட்டுள்ளனர்.

உயிர் காக்கும் சேவையில் ஈடுபடுபடுகின்ற அம்புலன்ஸ் வண்டிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது நியதி.