Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகின்றதா? பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

.

இந்த அரசாங்கத்தினுடைய பிரதான கோட்பாடுகளாக, கொள்கைகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என்பது ஆரம்பத்திலே இருந்தது.ஆனால், இன்று அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மாறாக, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் கூட அதேபோன்று வேறொரு சட்டத்தை கொண்டுவருதல் என்ற நிலைப்பாடடில் தான் அரசாங்கம் உள்ளது.இவ்வாறு தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிமைகளை வழங்காத எந்தவொரு அடக்குமுறை சட்டத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.இதன் கீழ் கைதாகி அரசியல் கைதிகளாக பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் கூட மீளவும் சிறையில் அடைக்கப்பட்டு், அவர்கள் தங்களை நிரூபிப்பதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் முன்பிருந்த அரசாங்கங்கள் வழங்கவில்லை

.இவ்வாறு இருந்தவர்களின் ஒருவரின் கையெழுத்தின் ஊடாக விரும்பிய நேரத்தில் விரும்பியவாறு தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்கள்.ஆகவே, நாம் அரசாங்கத்திடம் கேட்பது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே ஆகும் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் குறிபபிட்டுள்ளார்.