Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கைக்கான உதவியை உறுதிப்படுத்தியுள்ள சீன !

.

பரஸ்பரம் நன்மை பயக்கத்தக்க அடிப்படையில் இலங்கைக்கு நீண்டகால உதவி வழங்குதாக, சீன உயர் அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் சீனாவின் துணை அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி திஸாநாயக்கவின் வெற்றி மற்றும் பொதுத் தேர்தலில் அவரது கட்சியின் அமோக வெற்றிகளை தொடர்ந்து, இலங்கையில் முற்போக்கான அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாட்டை எடுத்துரைக்கும் மாற்றங்களை சீன அமைச்சர் பாராட்டியுள்ளார்.

இந் நிலையில், ஜனாதிபதி திஸாநாயக்கவின் தலைமையில் இலங்கையுடன் ஒத்துழைக்க சீனா தயாராகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரண்டு நாடுகளின் இலக்குகளின் சீரமைப்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையில் நீண்டகால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது இரண்டு தரப்பினரும் விவாதித்தனர்.

முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு உதவ சீனாவின் விருப்பத்தை பிரதிநிதிகள் குழு, இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கூடுதலாக, இலங்கையின் மனித வள மேம்பாட்டை மேம்படுத்துவதற்கு, குறிப்பாக கல்வித்துறையில் அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதன் மூலம், தமது ஆதரவை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.