Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

போலிப் பிரசாரம் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது!

தேர்தல் பிரச்சாரங்கள்.

அரசியல் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மெல்சிறிபுர பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வெற்றிப்பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”21 ஆம் திகதி இந்த நாட்டு மக்களின் வெற்றி நாளாகும்.

சாதாரண மாற்றமல்ல.நீண்டகாலமாக மக்கள் எதிர்ப்பார்த்த மாற்றமாகும். வறுமையான நாடு என்ற அடையாளத்தினையே ஆட்சியாளர்கள் உலகிற்கு வெளிப்படுத்தினர்.மக்கள் இன்று ஆட்சி மாற்றத்திற்காக எதிர்ப்பார்த்த தருணம் வந்துள்ளது.

21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதன் ஊடாக நாட்டில் மக்கள் யுகம் ஆரம்பிக்கப்படும்.தேர்தல் வெற்றியின் முழுமையான பங்குதார்கள் நாட்டு மக்கள்.தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றியினை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாம் கட்டம் கட்டமாக இந்த நாட்டை மீட்டெடுப்போம். இந்த நாட்டில் அரசியல் என்பது அபகரிப்பாகவே காணப்பட்டது. அந்த யுகத்தை நாம் மாற்றுவோம். இந்த நாட்டில் அரசியல்வாதிகள் செல்வந்தர்களாக மாறினார்கள் முதலில் நாம் ஊழல் அரசியலை முறியடிப்போம்.

மக்களுக்கான ஆட்சி மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திட்டங்களே எமது நோக்கமாகும் அரசியல் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவோம்.

இன்று அரசியல் மேடைகளில் தேர்தல் தோல்விக்கு அஞ்சுபவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்திவருகின்றனர்.

ஆனால் இந்த நாட்டில் போலிபிரசாரம் ஊடாக இனியும் மக்களை ஏமாற்றமுடியாது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி தெரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.