Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

திருடப்பட்ட விவசாயிகளின் உர மானியப் பணம்; சிக்கிய பெண் அதிகாரி!

.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணம் சில விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை எனவும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்னவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, விவசாய பிரதி அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.

அனுராதபுர மாவட்டத்தில் மட்டும் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணமான 2,934,310 ரூபாய் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் அதிகாரி இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

சில விவசாயிகளின் உர மானியப் பணம் மாயமாகியது தொடர்பாக இதுவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 

அதுபற்றி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விவசாய பிரதி அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.