Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

2ஆவது விருப்பு வாக்கை எண்ணினால் முடிவுகள் வெளியாவதில் தாமதமேற்படலாம்

.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ண வேண்டியிருந்தால், முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

இதுகுறித்து மக்கள் பதற்றமடையவோ அல்லது சந்தேகமோ கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தொலைதூர பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் நடைபாதையாக கொண்டு வர வேண்டியுள்ளது.

அதன் காரணமாக, ஒட்டுமொத்த முடிவைக் கணக்கிட்டு வழங்குவதில் தாமதம் ஏற்படலாம். முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மக்கள் மத்தியில் பல்வேறு பொய் பிரசாரங்களை பரப்பலாம்.

அங்கு அனைத்து ஊடகங்களுக்கும் ஒரு பெரிய பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களை அமைதியாக வைத்திருப்பது மிகவும் அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.