Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

15 வருட வரலாற்றை மாற்றிய இலங்கை அணி!

.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 க்கு 0 எனும் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 

காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்தியது.

இலங்கை சார்பில் முதல் இன்னிங்ஸில் டினேஷ் சந்திமால், கமிந்து மென்டிஸ் மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் சதம் கடந்தனர்.

நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அதற்கமைய, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக நியூஸிலாந்து மீண்டும் களமிறங்கிய போதிலும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

நிஷான் பீரிஸ் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

நிஷான் பீரிஸ் கன்னி டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்களை கைப்பற்றிய இலங்கையின் ஏழாவது வீரர் எனும் சிறப்பை பெற்றார்.

இந்த வெற்றியின் ஊடாக 02 போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு 0 என இலங்கை அணி கைப்பற்றியது.

அத்துடன் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 15 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.