Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டக்களப்பில் ஊழல்?; உலக வங்கியின் ஊடாக கிடைக்கப்பெற்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டம்

.

 

உலக வங்கியின் ஊடாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழல் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி பங்களிப்பில் மன்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மண்முணை பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (17) இடம்பெற்றது.

மண்முணைப் பற்று பிரதேச செயலக பிரிவிற்கான 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 7.5 மில்லியன் ரூபாவிற்கு மலசல கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 3.5 மில்லியன் ரூபாவில் மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சமூக அமைப்புக்களுக்கான உபகரணங்கள், பாடசாலைகளுக்கான விளையாட்டு மற்றும் பேண்ட் வாத்திய கருவிகள் அத்தோடு உள்ளூர் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

2022 ஆம் ஆண்டு மிகவும் ஒரு மோசமான வருடமாக காணப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ஓரளவு மாற்றம் ஏற்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஓரளவு முன்னேரிய நாட்டில் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மலசல கூடங்களுக்கு நிதியை ஒதுக்குவது சிறந்ததே.மிக மோசமான சுகாதார நடைமுறைகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் .

அதற்கு பலவிதமான திட்டங்களை அமுலாக்க வேண்டிய தேவைப்பாடுகளும் எழுந்திருக்கின்றது ஆனால் சில முயற்சிகளில் தோல்வியுற்றுள்ளோம்.

எமக்கு சிக்கலாக இருப்பது உலக வங்கியின் ஊடாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் மாத்திரம் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழலும் பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கதாக மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எவ்வாறாயினும் நாட்டில் வாய்ப்புகளை வழங்குகின்ற அச்சத்தை போக்குகிற ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.