Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடக்கு ,கிழக்குப் பகுதிகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் காரணமென்ன?

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

வடக்கு ,கிழக்குப் பகுதிகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் காரணமென்ன?

வடக்கு,கிழக்கில் பொலிஸார் முன்னெடுத்துவரும் அராஜகமே வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கான பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவருவதற்கு காரணம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி. ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்ற போது அதில் பங்கேற்று கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் மிகவும் அமைதியாக அடக்கமாக இந்த விடயத்தை கையாள செல்கின்றபோது பொலிஸார் இங்கு வந்து பல்வேறு விதமான சிரமங்களை ஏற்படுத்தினார்கள் இடையூறுகளை செய்தார்கள்.ஆனால் அவர்கள் நீதிமன்ற தடை உத்தரவு எதுவும் கொண்டு வரவில்லை.

நாம் நஞ்சை கொடுக்கவில்லை கஞ்சி யே கொடுத்தோம் மக்கள் அதனை விரும்பி அருந்துவதற்கு உடன்பாடாக இருந்தார்கள் ஆனால் மக்களை விடாமல் வீதியின் இரு மருங்கிளும் நின்று கொண்டு தடுத்துக் கொண்டிருந்தார்கள். சமய உரிமை மத உரிமை வழிபாட்டு உரிமை இறந்த அல்லது கொல்லப்பட்ட ஆத்மாக்களை நினைவு கூரக்கூடிய உரிமை சகலருக்கும் உள்ளது இதனை தடுப்பதற்கு இவருக்கும் உரிமை இல்லை.

யுத்தம் நடைபெற்று இத்தனை அழிவு நடைபெற்று 146,000 மக்கள் காணாமல் ஆக்கப்பட்டும் கூட இன்னமும் பொலிஸார் திருந்தவில்லை இதனால் தான் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்று கோருகின்றோம்.

பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம் சுயநிர்ணய உரிமை சுயாட்சி வடகிழக்கு இணைப்பு என்றெல்லாம் பேசுவது இந்த அடக்குமுறையில் இருந்து விடுபட்டு நாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தான் என்றார்.