Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

PTA விவகாரத்தில் ஜேவிபி யின் U Turn ! பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என ஜேவிபி அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என ஜேவிபி அரசாங்கம் அறிவித்திருக்கின்றது 
அதாவது பயங்கரவாத தடை ச் சட்டத்தை (Pவுயு) நீக்குவதாக அளித்த வாக்குறுதியிலிருந்து ஜேவிபி பின்வாங்கியுள்ளது 
அதே நேரம் அரசியல் பழிவாங்கலுக்காக Pவுயு  ஐ பயன்படுத்தமாட்டோம் என புது கதை சொல்லுகின்றது
1979 இல் ஒரு தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Pவுயுஇ 1982 இல் நிரந்தரமான சட்டமாக்கப்பட்டது. 
இவ் Pவுயு மூலம்    தமிழ் பேசும் மக்கள் மீதான தன்னிச்சையான கைதுகள்இ நியாயமற்ற விசாரணைகள் மற்றும் சித்திரவதைகள் அங்கீகரிக்கப்பட்டன 
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தரவுகளின்படி குறைந்தது 84% Pவுயு கைதிகள் கைது செய்யப்பட்ட பின்னர் சித்திரவதைகளை அனுபவிக்கின்றார்கள் 
அதே போல 90% க்கும் அதிகமான PTA கைதிகள்  சிங்கள மொழியில் ஆவணங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் 
இது போதாதென்று PTA கைதிகளுக்கு சட்ட உதவியும் கூட மறுக்கப்படுகின்றது 
2018 ஆம் ஆண்டு தரவுகளின் படி  29 தமிழ் அரசியல் கைதிகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரை எவ்வித விசாரணைகளுமின்றி  PTA யின் கீழ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்தனர் 
அதே காலத்தில் 11  தமிழ் அரசியல் கைதிகள் பேர் விசாரணைகளின்றி   10 முதல் 15 ஆண்டுகள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 
அதாவது PTA  எதுவித நீதியான முறைமைகளுமின்றி தடுத்துவைக்கின்றமை உட்பட்ட மிக அநீதியான முடிவுகளுக்கு இடம்கொடுத்திருக்கிறது. 
கடந்த 1 மாத காலப்பகுதியில் குறைந்தது  5 தமிழ் பேசும் செயல்பாட்டாளர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் விசாரணை என அழைக்கப்பட்டுள்ளார்கள் 
சமநேரத்தில் திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்திய பாணமுரே திலகவன்ச தேரர் மீது ஜேவிபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 
உண்மையில் PTA இனப்பாகுபாட்டுடன் தமிழ் பேசும் மக்கள் மட்டுமீது ஏவி விடப்பட்டது என்பதற்கு ஜேவிபி யின் ஒரு மாத ஆட்சியே சான்றாக இருக்கின்றது 
ஆகவே PTA ஐ  நீக்காமல் இருந்தால்  நெறிதவறிய முடிவுகளும் அநீதிகளும் கட்டமைக்கப்பட்ட வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் . 
ஆனால் ஜேவிபி ஒருபோதும் எங்களுக்கு நீதி வழங்க போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள இவ் PTA விவகாரத்தில் ஜேவிபி யின் U Turn ஒரு சான்றாக இருக்கும்.