Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொழும்பில் நடைபெற்ற செம்மணி நூல் வெளியீட்டு நிகழ்வு!

.

கொழும்பில் நடைபெற்ற செம்மணி நூல் வெளியீட்டு நிகழ்வில், பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ், “உடல்களை புதைக்கலாம், ஆனால் உண்மைகளை ஒருபோதும் புதைக்க முடியாது” என தெரிவித்துள்ளார். 
புதைக்கப்படாத எலும்புக்கூடுகளும் ஆன்மாக்களும் உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் ஆன போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என அவர் கவலை தெரிவித்தார். தமது உறவினர்களைத் தேடி, விசாரணைகள் மற்றும் சாட்சி பதிவுகளுக்காக அலைந்து, மக்கள் களைப்படைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது, யாரால் நடத்தப்பட்டது, அவர்களின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களை அறிந்துள்ளதாகவும் ரணிதா தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தவர்கள், சோதனைச் சாவடிகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கான புள்ளிவிவரங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பதிவாகியுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகள் மிகவும் தாமதமாக முன்னெடுக்கப்படுவதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 
பாதிக்கப்பட்டவர்கள் 16 ஆண்டுகளாக நீதிக்காக பரிதவிப்பதாகவும், சுயாதீன விசாரணைகள் மூலம் விரைவாக நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் வலியுறுத்தினார்.