Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஊர்மனையை அண்மித்த இராமர் பாலத்தின் மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வாய்ப்பு!

,

லைமன்னார் - ஊர்மனை பகுதியை அண்மித்துள்ள இராமர் பாலத்தின் 6 மணல் திட்டுகளை எதிர்வரும் மே மாதம் 15 திகதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண சுற்றலாப் பணியகத்தின் தலைவர், மன்னார் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர், பிரதேச செயலாளர், கடற்படையினர், கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். 

இராமர் பாலத்தினை பார்வையிடுவதற்கான படகுப் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்தார். 

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு மற்றும் அது தொடர்பிலான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படவுள்ளன. 

இது தொடர்பில் முன்னதாகவே பாதுகாப்பு அமைச்சு அனுமதியினை வழங்கியிருந்தது. 

எனினும், அது நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அடுத்த கட்டமாகச் சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.