Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பேச்சு பல்லாக்கு! தம்பி பொடிநடை!! ஊடகங்கள் உடாக அரசை நகர்த்தும் NPP ஆட்சியாளார்கள்.

ஆட்சி ஆறுமாதம் கடந்துவிட்டது. இவ் ஆட்சியாளார்கள் தமிழ்மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன.....?

பேச்சு பல்லாக்கு தம்பி பொடிநடை என்ற. பழமொழிக்கு ஏற்ப ஊடகங்கள் உடாக அரசை தகர்த்தும் NPP ஆட்சியாளார்கள்.
ஆட்சிக்கு ஆறுமாதம் கடந்துவிட்டது. இவ் ஆட்சியாளார்கள் தமிழ்மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன.....? ஐந்நூறு கோடி ரூபா அபிவிருத்தி  நிதி அதை கடந்து ஆற்றிய சேவை என்ன....? வலிவடக்கிலோ கோப்பாப்பிலவிலோ இதர ஆக்கிரமிப்பு இடத்திலிருந்தோ காணிகள் விடுவிக்கப்பட்டதா......?
நல்லாட்சி காலத்தில் நடந்ததை போல் வேகமாக ஏதாவது காணி விடுவிப்போ அபிவிருத்தியோ நடக்கிறதா.....? எத்தனை அரசியல் கைதிகள் விடுதலையானர்கள்
அரசியல் கைதி என யாருமில்லையாம்.
குற்றத்திற்கான தண்டனை குற்றவாளிகளே உள்ளனராம். வடக்கு தெற்கு என்ற பேதம் எதுவும் இல்லையாம் ஆனால அடாத்தாக பௌத்த விகாரைகள் அமைக்கலாம் அதற்கு சட்டவிதிவிலக்கு உண்டு...!
தெற்கில் கிடைக்கும் நீதியை வடக்கில் உள்ளோர் பெறமுடியாது. ஏனேனில் நீங்கள் தமிழர்கள் நாம் பௌத்த சிங்கள மக்கள் எமக்கிருக்கும் அரசியல் உரிமைகளை நீங்கள் பெறமுடியாது ஏன்...?  பௌத்தத்துக்கு முதலிடம் NPP துஏP நாம் இருவர் ஒருவர். எம்மிடம் உள்ள இனவாத சாயத்தை மறைக்கவே கஜமுக சூரனாக NPP அவதாரம் எடுத்தோம்.
இனி என்ன நடக்க போகிறது.....? தமிழர்களே தங்களை தாங்களே அழித்து கொண்டனர் என்ற முத்திரையை பதிக்க பிள்ளையான் கருணா டக்ளஸ் போன்றோர் கைது செய்து ஆட்சியாளர் தம்மை புனிதப்படுத்துவர் அவர்களை ஏவியவர்கள் யார் .....? அந்த. அதிகாரத்தை வழங்கிய நபர்கள் யார்....? ஒரு போதும் அவர்கள் கைதாகமாட்டார்கள் ஏனேனில் அவர்கள் விடுதலை புலிகளை அழித்த பேரன்புக்குரியவர்கள்.
இவர்கள் பௌத்தர்கள் அவர்கள் மேல் சட்டம் பாயாது....! இதுவே இலங்கை தீவின் மிகப்பெரும் சாபம் இச்சாபம் அகலா வராக்கும் இந்த அழகான தேசத்துக்கு விடிவே இல்லை. தமிழனை ஒடுக்க இந்த இலங்கை தாயை அந்நிய தேசத் தலைவர்களுக்கு விலை மாதராக்கி விருந்து வைப்பார்கள். இவர்களுக்கு வாக்கு பொறுக்க ஒரு ஜனநாயக வழியில் ஒரு படித்த கூட்டம் வேறு தமிழர்களின் கோடாரிகாம்புகள் இவர்கள்.
நான்கு தசாப்தமாக ஆயுதவழியில் போராடி மரணித்தவர்களின் கல்லறை கூட இந்த மடையர்களை எண்ணி கண்ணீர் விடும் இவ்வாறான கேவலமான இனத்துக்கா எமது உயிரை இ ழந்தோம் என......! அட அறிவு கெட்ட ஜென்மங்களே தென்னிலங்கை கட்சிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் சர்வதேச நெருக்குதலில் இருந்து போர்குற்றவாளிகளை காப்பாற்றும் எம் இனம் முழுமையாக.  சுயத்தை இழக்கும்.
அன்பான தமிழ் சொந்தங்க ளே எமது வாக்குகள் அனைத்தும் தமிழ் தேசியத்தை நாடிநிக்கும் கட்சிகளுக்கே வழங்குங்கள்.
தர்மம் ஒரு நாள் வென்றேயாகும்.