Breaking News
இந்திய எதிர்ப்பை அடுத்து திருகோணமலையில் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சியை ரத்து செய்தது இலங்கை!
வங்காள விரிகுடா மற்றும் அருகிலுள்ள நீர்நிலைகளில் கண்காணிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதிருகோணமலை!

இந்தியா எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, திருகோணமலை கடற்பரப்பில் பாகிஸ்தானுடன் நடத்த திட்டமிட்டிருந்த கடற்படைப் பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையிலான வழக்கமான கடற்படைப் பயிற்சியின் ஒரு பகுதியாக நடக்கும் இது, இந்தியா தனது அச்சங்களை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்ததை அடுத்து ரத்து செய்யப்பட்டது. இலங்கை அல்லது பாகிஸ்தான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.