Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மத்திய கிழக்கில் 10 இலட்சம் இலங்கையர்கள் - அதிரவைக்கும் புதிய புள்ளிவிவரங்கள்!

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது இலங்கையர்கள் வசித்து வருவதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள்.

மத்திய கிழக்கில் 10 இலட்சம் இலங்கையர்கள் - அதிரவைக்கும் புதிய புள்ளிவிவரங்கள்! 
மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தரவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.  பெப்ரவரி 28, 2026 நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,

மொத்தம் 1,007,855 இலங்கையர்கள் மத்திய கிழக்கில் தங்கியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் 350,000 
சவுதி அரேபியாவில் 246,139 
குவைத்தில் 175,000 
கட்டாரில் 140,000 
ஜோர்தானில் 14,500 
ஓமானில் 32,000 
பஹ்ரைனில் 13,130 

ஈரான் (35), சிரியா (20), ஏமன் (27),பாலஸ்தீனம் (4)  நாடுகளிலும் சிறிய அளவிலான இலங்கையர்கள் பதிவாகியுள்ளனர்.
ஈராக் தொடர்பான தரவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

மத்திய கிழக்கில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் கணிசமான பங்கினை வகிக்கின்றனர். குறிப்பாக வீட்டுப் பணி, கட்டுமானத் துறை, விருந்தோம்பல் (Hospitality) மற்றும் சுகாதாரத் துறை என்பவற்றில் அவர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனுப்பும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (Remittances) இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான தூணாக விளங்குகின்றது.

இந்தநிலையில் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் நிலையை அடுத்து, பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
மேலும் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சு வெளியிடும் பயண ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும், தூதரக அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.