Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரமான செயல் ஈஸ்டர்று தாக்குதல் !

"உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நோக்கம் இல்லை"

அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரமான செயல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்தது," ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பொலன்னறுவையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தரை வருடங்களாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் உள்ள நோக்கம் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதாகும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

"2019 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கும் - அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கத்திற்கும் - உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நோக்கம் இல்லை" என்று அவர் கூறினார்.

பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள், தற்போதைய NPP அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்கு படிப்படியான நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இன்று அதிகாலை, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, ஜனாதிபதி திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.