Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கனடாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இந்திய குற்றவாளி அமெரிக்காவில் கைது!

,

கொலைக்குற்றம் ஒன்று தொடர்பில் இந்தியாவில் தேடப்பட்டுவரும் ஒருவர் கனடா அமெரிக்க எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷாத் குமார் (22) என்னும் இந்தியர், இந்தியாவில் கொலைக்குற்றம் ஒன்று தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டுவருகிறார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, தனது அடையாளத்தை மறைத்து, போலியான பெயர் மற்றும் பிறந்த திகதியுடன், நியூயார்க்கையும் ஒன்ராறியோவையும் இணைக்கும் Peace Bridge என்னும் பாலம் வழியாக கனடாவுக்குள் நுழைய முயன்றிருக்கிறார் விஷாத். 
ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்படவே, மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முயன்ற விஷாத்தை அமெரிக்க அதிகாரிகள் விசாரிக்க, அவர் கொலைக்குற்றம் ஒன்றிற்காக இந்திய பொலிசாரால் தேடப்பட்டுவரும் நபர் என தெரியவந்துள்ளது.
அவரைக் கைது செய்ய இன்டர்போல் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையில், அமெரிக்க பொலிசார் விஷாத்தைக் கைது செய்துள்ளார்கள்.

2024ஆம் ஆண்டு, விஷாத் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த நிலையில், தற்போது அங்கிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்றபோது கனடா அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுக்க, அமெரிக்க பொலிசாரிடம் சிக்கிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.