Breaking News
தமிழரசுக் கட்சி முல்லைத்தீவில் முன்னிலையில்!
.

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு - மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
இலங்கை தமிழரசுக் கட்சி 1364 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 990 வாக்குகளை பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 808 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 607 வாக்குகளை பெற்றுள்ளது.